மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழப்பு - பிறிதொருவர் படுகாயம்!

​கண்டி - வத்தேகம, மடுகலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் தேநீர் பருகிக்கொண்டிருந்த சமயம், மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழப்பு - பிறிதொருவர் படுகாயம்!

​கண்டி - வத்தேகம, மடுகலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் தேநீர் பருகிக்கொண்டிருந்த சமயம், மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த நிலையில் வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விரு பெண் தொழிலாளிகள் மட்டுமே அவ்விடத்தில் இருந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம், வத்தேகம, மடுகலை நெல்லிமலைத் தோட்டத்தில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது. 

நான்கு பிள்ளைகளின் தாயான, சண்முகம் விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அந்தப் பிரதேசத்தில் இன்று காலை முதல் கடும் காற்று வீசியதுடன், தொடர்ந்து மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அசாதாரண காலநிலை காரணமாக நெல்லிமலை சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் பெற்றோர் இடைநடுவிலேயே வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.