சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் இணையத்தில் ஏலம்!

இலங்கை சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை டிசம்பர் மாதம் முதல் இணையத்தில் ஏலம் விட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் இணையத்தில் ஏலம்!

இலங்கை சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை டிசம்பர் மாதம் முதல் இணையத்தில் ஏலம் விட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒருகொடவத்த பகுதியிலுள்ள சுங்கத்துறையின் முனையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, 18 ஆயிரத்து 765 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனூடாக மத்திய அரசுக்கு 14 கோடி ரூபா வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.