யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு துரிதமாக கட்டணமானி பொருத்தப்படும்!

அடுத்த மாதம் முதலாம் திகதிக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கை முடிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு துரிதமாக கட்டணமானி பொருத்தப்படும்!

அடுத்த மாதம் முதலாம் திகதிக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கை முடிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இன்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் செயலாளர் இதனை தெரிவித்தார்.

“தற்பொழுதுள்ள பொருளாதார நிலைமையினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாங்கள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்” என செயலாளர் தெரிவித்தார்