சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் கைது!

சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் கைது!

வீரவில திறந்தவெளி சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை முகாமில் பணிபுரியும் புனர்வாழ்வு உத்தியோகத்தர் ஒருவரது மோட்டார் சைக்கிள் மூலம் நேற்று தப்பிச்சென்ற நிலையில் தெபரவெவ பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பியோடிய, குறித்த நபருக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.