கல்வி அமைச்சின் அறிவுறுத்தல் !

கல்வி அமைச்சின் அறிவுறுத்தல் !

அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி வசந்த பெரேராவின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் பிரதிகள் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலவும் அதிக வெப்பம் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது