தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி இன்று வாகன பேரணியில் கலந்து கொள்கிறார். 

இதற்காக பேரணி நடைபெறும் பகுதி  முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. 

பேரணிக்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பகுதியிலுள்ள தனியார் மேல்நிலை பள்ளிக்கு இன்று முற்பகல் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.