புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக இறந்ததாக கூறிய நடிகை பூனம் பாண்டே!

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக  இறந்ததாக கூறிய நடிகை பூனம் பாண்டே!

சர்ச்சைக்குரிய நடிகையான பூனம் பாண்டே, தனது 32வது வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தமை வைரலாகியது.

இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் காணொளியொன்றை பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும், அதில், "உங்கள் அனைவருடனும் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ளும் நிர்ப்பந்தத்தில் நான் இருக்கிறேன்.  

ஆம், "நான் இருக்கிறேன்" - உயிருடன்.

ஊடகங்களில் வந்தது போல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் என் உயிரை பலி வாங்கவில்லை.

ஆனால், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத எண்ணற்ற பெண்களை நாள்தோறும் அது பலி வாங்குகிறது. 

கர்ப்பப்பை புற்றுநோய், பிற புற்றுநோய்களை போல் அல்ல.

முற்றிலும் தடுக்க முடியும். ஹெச்.பி.வி (HPV) தடுப்பூசி மற்றும் முன்னரே கண்டறியும் சோதனைகள் ஆகியவற்றில் இதற்கு தீர்வு உள்ளது.

இந்நோயினால் இனி வரும் காலங்களில் எவரும் உயிரிழக்காமல் இருக்க நம்மிடையே இன்று மருத்துவ வழிமுறைகள் உள்ளன. 

நாம் ஒன்றிணைந்து, பெண்ணினத்தின் மீது இந்த கொடிய உயிர்கொல்லி நோய் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு முடிவை கொண்டு வருவோம்" என்று கூறியுள்ளார்.