மின்சாரம் தாக்கி  3 பேர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி  3 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் - தெலுங்கானா மாநிலத்தில் மின்சாரம் தாக்கி  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் - வாரங்கல் மாவட்டம், பர்வத கிரி பகுதியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் ஆலயம் ஒன்று உள்ளது.

குறித்த துர்க்கை அம்மன் ஆலய திருவிழா இடம்பெறவுள்ளது.

இதற்காக கோவில் வளாகம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன.

இந்தநிலையில், மின்விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர்.

இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த ஆலயத்தின் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.