மணிப்பூரில் தொடர்ந்து வெடிக்கும் போராட்டங்கள் - வீதியில் குவிந்த பெண்கள்!

இந்திய - மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சிறுபான்மை இன பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன

இதன்படி, அந்த மாநிலத்தில் உள்ள பெண்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் அதிகளவிலான பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.