பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிய யாழ்.கனேடியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிய யாழ்.கனேடியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக் கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருபவருமான நாகராஜா சசிதரன் (61) என்பவரே உயிரிழந்தார். 

தெல்லிப்பழை மகாஜன கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த சனிக்கிழமை தெல்லிப்பழை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

அதன் போது, பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டுஇருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.