வவுனியா - தோணிக்கல் இரட்டைக் கொலை -பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது தாக்குதல்

வவுனியா, தோணிக்கல்லில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்திசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா - தோணிக்கல் இரட்டைக் கொலை -பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது தாக்குதல்

வவுனியா, தோணிக்கல்லில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்திசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில்பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் சகோதரர் வசித்து வரும் தவசிகுளம் பகுதியில் வைத்து இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் பிரதான சந்தேக நபரின் சகோதரரான 37 வயதுடைய நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.