யாழில் பெண்ணொருவர் மீது பாலியல் வன்புணர்வு சம்பவம் - ராணுவ சிப்பாய்கள் மீதான தீர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை கொலை செய்த சம்பவத்தில் மேல் நீதிமன்றினால் மூன்று இராணுவ சிப்பாய்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

யாழில் பெண்ணொருவர் மீது பாலியல் வன்புணர்வு சம்பவம் - ராணுவ சிப்பாய்கள் மீதான தீர்ப்பு!

தற்போது மூன்று இராணுவ சிப்பாய்களில் இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றினால் குற்றமற்றவர்கள் என கருதி விடுவிக்கப்பட்டனர்.

மற்றுமொரு சந்தேகநபருக்கு எதிராக மீண்டும் வழக்கு விசாரணைகளை நடத்திச் செல்லுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - பலாலி வீதியின் கோண்டாவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு அருகில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட நிலையில்  கொலை செய்யப்பட்டதாக, மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.