எரிபொருளை கொண்டு செல்லும் குழாய் அமைப்பில் கோளாறு

கொழும்பு துறைமுகத்தையும் கொலன்னாவையும் இணைக்கும் இரண்டு எண்ணெய் குழாய்களில் ஒன்றில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள குழாய் வழியாக போதுமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.