மீகொடை பொருளாதார மத்திய நிலைய கொள்ளை - மேலும் இருவர் கைது!

மீகொடை பொருளாதார மத்திய நிலைய கொள்ளை - மேலும் இருவர் கைது!

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு உதவிபுரிந்த மேலும் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடகம மற்றும் ஹோமாகம பகுதியை சேர்ந்த 32 மற்றும் 45 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீகொடை பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 12ஆம் திகதி மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திற்கு உந்துருளியில் பிரவேசித்த இருவர் அங்குள்ள வர்த்தக நிலையொன்றில் காசாளராக பணியாற்றிய யுவதியொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 45,000 ரூபாய் பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.