மாதயிறுதியில் போராட்டத்திற்கு தயாராகும் கிழக்கு மாகாணம் - காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அறைகூவல்!

சர்வதேச ரீதியாக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30 அன்று அனுஷ்டிப்பு!

எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச ரீதியாக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தலைவி தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. 

 திருகோணமலையில் நேற்றைய தினம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஊடக இல்லத்தில் குறித்த சந்திப்பு முதலாவதாக இடம்பெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய போராட்டங்கள் குறித்த அறிவிப்பையும் அழைப்பையும் விடுத்திருந்தனர்.