முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக (16) இன்றையதினம் பொதுசந்தைக்கு அருகாமையிலும் புதுக்குடியிருப்பு சுரேஸ்குடியிருப்பு சந்தியிலும் புதுக்குடியிருப்பு திலக்கண்ணாச்சி குடியிருப்பு சந்தியிலும் 

 நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

இதன்போது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.