முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பத் தயார் - தமிழக அரசு

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பத் தயார் - தமிழக அரசு

3 தமிழர்களை இலங்கை அனுப்ப தமிழக அரசு தயாராக உள்ள நிலையில், அந்த கோரிக்கை நிலுவையில் உள்ளதால், மூவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி கோரிக்கையை முன்வைத்தது.

அப்போது பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேஷ், மூவரும் தங்களுக்கான ஆவணங்களை  வழங்கக்கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா? என்று தங்களுக்கு தெரியவில்லை என்று பதிலளித்தார். 

இதனையடுத்து 3 பேர் தொடர்பான இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஆனால், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.