காலி முகத்திடலில் இந்தியப் பிரஜையை கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றொருவருக்கு சிறை!

காலி முகத்திடலில் உள்ள உணவகம் ஒன்றில், இந்தியப் பிரஜை ஒருவரை, கூரிய ஆயுதத்தால் தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, மற்றுமொரு இந்தியப் பிரஜை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் இந்தியப் பிரஜையை கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றொருவருக்கு சிறை!

காலி முகத்திடலில் உள்ள உணவகம் ஒன்றில், இந்தியப் பிரஜை ஒருவரை, கூரிய ஆயுதத்தால் தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, மற்றுமொரு இந்தியப் பிரஜை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் உள்ள உணவகம் ஒன்றில், முகாமையாளராக பணியாற்றிய குறித்த சந்தேகநபருக்கும், மற்றுமொரு இந்தியப் பிரஜைக்கும் இடையே நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறிய நிலையில், இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை, எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.