சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த விண்ணப்பதாரர்களில் 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளனர்.

அத்துடன், நாளை ஆரம்பமாகவுள்ள குறித்த பரீட்சைக்கு பரீட்சை மண்டபத்திற்கு முன்கூட்டியே வருமாறும், தேவையற்ற பொருட்களை பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சார்த்திகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்படி, இதனை மீறும் பட்சத்தில் பரீட்சை குற்றமாக கருதி அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்கு பரீட்சை தடை விதிக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

நாளை நடைபெறவுள்ள குறித்த பரீட்சை தொடர்பில் இன்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.