ரயில் மோதலை தவிர்க்க புதிய அட்டவணை

ரயில் மோதலை தவிர்க்க புதிய அட்டவணை

யானை-ரயில் மோதலை தடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 07) முதல் மட்டக்களப்பு பாதையில் தொடங்கும் ரயில் கால அட்டவணையில் இலங்கை ரயில்வே திணைக்களம் திருத்தம் செய்துள்ளது.

யானை வழித்தடத்தினூடாக பயணிக்கும் ‘மீனகயா’ நகரங்களுக்கிடையிலான அதிவேக ரயில் இந்த வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கு புறப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழமையாக இரவு 07.00 மணிக்கு புறப்படும் நேரத்திலிருந்து மாற்றம், கடந்த மாதம் யானைக்கூட்டம் ஒன்று மோதியதில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வந்துள்ளது.