மீண்டும் ஒரு புதிய காற்று சுழற்சி உருவாக்கம் - இலங்கையை நோக்கி நகரும்!

எதிர்வரும் 08ஆம் திகதியளவில் சுமத்ரா தீவு அருகே தெற்கு அந்தமான் - இந்திராமுனை அருகே ஒரு புதிய காற்று சுழற்சி உருவாகும் சாத்தியம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு புதிய காற்று சுழற்சி உருவாக்கம் - இலங்கையை நோக்கி நகரும்!

எதிர்வரும் 08ஆம் திகதியளவில் சுமத்ரா தீவு அருகே தெற்கு அந்தமான் - இந்திராமுனை அருகே ஒரு புதிய காற்று சுழற்சி உருவாகும் சாத்தியம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அது காற்றழுத்த தாழ்வு நிலையாக சற்று தீவிரமடைந்து எதிர்வரும் 12ஆம் திகதியளவில் இலங்கைக்கு நெருக்கமாக இலங்கையின் தென்கிழக்கு பகுதிக்கு நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மீண்டும் சில நாட்களுக்கு மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இன்று முதல் பிற்பகல் அல்லது மாலை வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடையிடையே பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.