விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பயணி - விமானம் நான்கு மணி நேரம் தாமதம்!

விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பயணி - விமானம் நான்கு மணி நேரம் தாமதம்!

விமானத்தில் பயணம் செய்யும்போது சில பயணிகள் வினோதமாக நடந்த கொள்வது வழக்கம். 

ஆனால் சற்று வித்தியாசமான சம்பவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் ஆதரவோடு விமானத்தின் கதவை திறந்து, விமான இறக்கையில் நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.

இறக்கையின் பாதிதூரம் வரை சென்ற அந்த நபர், மீண்டும் விமானத்திற்குள் திரும்பி வந்தார். விமானத்தை சேதப்படுத்தவோ, அசம்பாவிதமான செயல்களிலோ ஈடுபடவில்லை.

ஆனால், விமான போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின்படி அந்த நபரை விமான ஊழியர்கள் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

இதனால் குறித்த விமானம் சுமார் நான்கு மணி நேரம் காலதாமதமானதாக தெரிகிறது.

இதனால் பயணம் செய்ய இருந்தோர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் காற்று குறைவான இடத்தில் அவர்கள் அமர்த்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து குறித்த நபர் அவ்வாறு செய்துள்ளார். 

விமானத்தில் இருந்த 77 பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

என்றபோதிலும் விமான ஊழியர்கள் அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த நபருக்கு ஆதரவான இருந்து பயணிகள் "காலதாமதம், காற்று குறைபாடு பயணிகள் ஆரோக்கியதிற்கு கேடுவிளைவிப்பதாக இருந்தது. அவர் எங்கள் உயிரை காப்பாற்றினார் எனத் தெரிவித்தனர்.