நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து முதியவரின்  சடலம் மீட்பு!

நுவரெலியாவில் உள்ள கிரகரி வாவியிலிருந்து இன்று முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் வழங்கிய தகவலின் படி சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நாவலப்பிட்டி கெடபுல்லா பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.