இணையம் வாயிலாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது!

இணையம் வாயிலாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது!

மலேசியாவில் இணையதளம் ஊடாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் மலேசிய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுடையவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இதன்போது 16 மடிக்கணினிகள், 10 கணனிகள் மற்றும் 45 கையடக்கத் தொலைபேசிகள் என்பன குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.