நேபாள நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

நேபாள நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து அங்கு கனமழை பெய்து வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழை மற்றும் மின்னல் தாக்கமும் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 

இதில் 3 குழந்தைகளும் அடங்குவர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நிலச்சரிவில் உயிரிழந்தனர்.

கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல இலட்சம் பேர் பருவகாலத்தின் போது ஏற்படும் மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய பேரிடர் முகாமைத்துவ கழகம் தெரிவித்துள்ளது.