யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி சந்தியில் விபத்து - 5 பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி சந்தியில் இன்று (23) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.