பாடசாலை வேன் மோதியதில் - 04 வயது குழந்தை பலி!

பாடசாலை வேன் மோதியதில் - 04 வயது குழந்தை பலி!

பெரியநீலாவணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட விஷ்ணு வித்தியாலய வீதி பகுதியில் பாடசாலை வேன் ஒன்று மோதியதில் 04 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த 04 வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

அத்துடன் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.