மோடியை விரும்பும் பாகிஸ்தானியர்

மோடியை விரும்பும் பாகிஸ்தானியர்

தங்களது நாட்டு பிரதமராக நரேந்திர மோடி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் வெளியிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இலங்கையை போன்று பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் இளைஞர் ஒருவரிடம் செவ்வி கண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அதில் தங்களுக்கும் நரேந்திர மோடி பிரதமராக இருந்தால் நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடியை போன்று பிரதமர் வேண்டும் என்றும் குறித்த இளைஞர் கூறியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த இளைஞரின் அதேபோன்ற மற்றுமொரு காணொளியும் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது.