நாடாளுமன்றில் ரிஷாட் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிள்ளையான்! (காணொளி)

செனல் 4 தொலைக்காட்சியில் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆவணப் படமொன்று வெளியிடப்பட்ட நிலையில் எதிர்கட்சியினால் சபை ஒத்திவைத்து வேளை விவாதத்துக்கான பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரக்காந்தன் (பிள்ளையான்), குறித்த ஆவணப் படத்தின் தகவலாளரான அசாத் மௌலானா தமக்கு அனுப்பிய குரல் பதிவொன்றை சபையில் ஒலிக்கச்செய்தார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியூதீன் குறித்த குரல் பதிவில், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் உள்ளதாக கூறிய இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரக்காந்தன், அதனை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.