முள்ளிவாய்க்கால் கஞ்சிகாய்ச்சி கொடுக்கச் சென்ற மக்கள் மீது பொலிஸார் அடாவடி!

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இன்றைய தினம் [12] முள்ளிவாய்க்கால் கஞ்சிகாய்ச்சி கொடுக்கச் சென்ற மக்கள் மீது பொலிஸார் அடாவடிதனம் மேற்கொண்டுள்ளனர்.

எதிர்ப்பு தெரிவித்த மக்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி கஞ்சி வழங்கக்கூடாது என்று அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து பிரதேச மக்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.