கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி - 17 பேர் படுகாயம்! (படங்கள்)

கொழும்பு - கொள்ளுப்பிட்டி - டுப்ளிகேஷன் வீதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது மரம் ஒன்று விழுந்ததில் 05 பேர் பலியானதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி - 17 பேர் படுகாயம்! (படங்கள்)

கொள்ளுப்பிட்டி- லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கிச் சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து தெனியா நோக்கிப் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து காரணமாக டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன், அருகில் உள்ள வீதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.