கார்கோ பெட்டி வீழ்ந்து மட்டக்களப்பு இளைஞன் (21) உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து ஏற்றிச் செல்லப்பட்ட கார்கோ பெட்டியொன்றை லொறியிலிருந்து வேறொரு வாகனத்திற்கு மாற்றும் போது தவறி வீழ்ந்து பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

அஸ்ஹர் வித்தியாலய குறுக்கு வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய முஹம்மது இப்றாஹீம் றிமாஸ் எனும் இளைஞன் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அகீல் எமேர்ஜென்ஸி ஹெல்பிங் யுனிட் பணிப்பாளர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜி மற்றும் அல் கிம்மாவின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஹாறூன் ஸஹ்வி ஆகியோர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

ஜனாஷா தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த இளைஞன் மீராவோடை தபாலக ஊழியர் முஹம்மது இப்றாஹீம் என்பவரின் புதல்வராவார்.