இரசாயனவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பு!

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பு!

உலக அளவில் மருத்துவம், பௌதீகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு அறிவிப்புகள் நேற்று முன்தினம் ஆரம்பமானது. 

இந்த அறிவிப்புகளை சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நோபல் சபை செயலாளர் தோமஸ்பெர்ல்மன் அறிவித்தார். 

இதன்படி மருத்துவம், இரசாயனவியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மவுங்கி பவெண்டி லூயிஸ் புரூஸ் அலெக்சி எகிமோவ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல்சபை தெரிவித்துள்ளது.