நாளை முதல் மீண்டும் மின்வெட்டு!
![நாளை முதல் மீண்டும் மின்வெட்டு!](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ac5bc464e85.jpg)
நாளையதினம் முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நாளை முதல் மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.