குளியலறையில் தவறி விழுந்த கர்ப்பிணி தாயும் சிசுவும் உயிரிழப்பு!

குளியலறையில் தவறி விழுந்த கர்ப்பிணி தாயும் சிசுவும் உயிரிழப்பு!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாய் குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் நேற்றைய தினம் விடுதியில் உள்ள குளியலறைக்குச் சென்ற நிலையில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திர சிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்தவர்களின்சடலங்கள் உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.