ஆசன ஒதுக்கீட்டு முறையில் சிக்கல்

ஆசன ஒதுக்கீட்டு முறையில் சிக்கல்

நீண்டதூர புகையிரத சேவைக்கு இணையவழி ஊடாக ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுமாயின், அடுத்த சில நாட்களில் அந்த சிக்கல்களை நிவர்த்தி செய்யப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையவழி ஊடாக ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் சிக்கல்கள் உள்ளதாக சில பயணிகள் முறைப்பாடளித்துள்ளனர்.

இந்தநிலையில் புகையிரத திணைக்களம் முதல் முறையாக இணையவழி ஊடாக ஆசனத்தை பதிவு செய்வதற்கான முறைமையை அறிமுகப்படுத்தியது.

இதன்படி, இணையத்தின் ஊடாக ரயில் ஆசனத்தை முன்பதிவு செய்திருந்தாலும் சில பயணிகளுக்கான ஆசனம் அவர்கள் புகையிரத நிலையத்திற்கு பிரவேசித்த பின்னரும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிடுகின்றனர்.