மதுவரி அனுமதிப்பத்திர கட்டணத்தை மீண்டும் திருத்துவதற்கு தீர்மானம்!

மதுவரி அனுமதிப்பத்திர கட்டணத்தை மீண்டும் திருத்துவதற்கு தீர்மானம்!

வருடாந்த மதுவரி அனுமதிப்பத்திரத்துக்காக அறவிடப்படும் கட்டணத்தை மீண்டும் திருத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த திருத்தங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்த வருடாந்த மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திர கட்டணம் 20 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மதுவரி கட்டளைச் சட்டத்தின்படி, கடந்த ஜனவரி 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மதுவரி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை நிதி அமைச்சு திருத்தியிருந்தது.

எவ்வாறாயினும்,  குறித்த திருத்தங்களுக்கு எதிர்ப்பு வெளியானதை அடுத்து மீண்டும் வருடாந்த மதுவரி அனுமதிப்பத்திர கட்டணத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.