கல்வியியற் கல்லூரிகளுக்கு 60,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்!

கல்வியியற் கல்லூரிகளுக்கு 60,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்!

கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்வியியற் கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 23,005 பேர் பணியமர்த்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.