தென்னிலங்கை மாதம்பேயில் வாகன விபத்து - மூவர் உயிரிழப்பு!

மாதம்பே - கலஹிடியாவ சந்தி பகுதியில் பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சிலாபம் - கொழும்பு பேருந்துடன் முச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.