இலங்கைக்கு கிடைக்கப்போகும் 150 மில்லியன் டொலர்கள்!
![இலங்கைக்கு கிடைக்கப்போகும் 150 மில்லியன் டொலர்கள்!](https://tamilvisions.com/uploads/images/202406/image_870x_667abd69d3df0.jpg)
இலங்கையின் சுகாதாரத்துறையை வலுவூட்ட வேண்டும் என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் (Faris H. Hadad-Zervos) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது.
இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்துரைக்கும் போதே உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.