வெறிச்சோடிய வீட்டில் மது அருந்திய மூன்று யுவதிகள் மற்றும் மூன்று இளைஞர்கள் கைது!

அம்பாறை பிரதேசத்தில் வெறிச்சோடிய வீடொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த மூன்று யுவதிகள் மற்றும் மூன்று இளைஞர்களை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெறிச்சோடிய வீட்டில் மது அருந்திய மூன்று யுவதிகள் மற்றும் மூன்று இளைஞர்கள் கைது!

அம்பாறை பிரதேசத்தில் வெறிச்சோடிய வீடொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த மூன்று யுவதிகள் மற்றும் மூன்று இளைஞர்களை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்வதாக வீடுகளுக்குச் சொல்லிவிட்டு வெறிச்சோடிய வீட்டிற்குச் சென்று மது அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அம்பாறை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்தியரிடம் ஆஜர்படுத்திய போதே இவர்கள் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை பன்னல்கம மற்றும் பக்மிட்டியவ கிராமங்களைச் சேர்ந்த குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர், யுவதிகள் 18 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.