சீதுவ கொலை சம்பவத்துடன்  தொடர்புடையவரை  கைது செய்ய நடவடிக்கை 

சீதுவ கொலை சம்பவத்துடன்  தொடர்புடையவரை  கைது செய்ய நடவடிக்கை 

சீதுவ - ரத்தொலுகம பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை இன்றைய தினத்துக்குள் கைது செய்ய முடியும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் குறித்த பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் குறித்த இருவரும் வசித்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தேடப்படுகிறார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.