தர்மபுரம் பகுதியில் கத்தி குத்து - ஒருவர் பலி

தர்மபுரம் பகுதியில் கத்தி குத்து - ஒருவர் பலி

பாடசாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (4) ஒரு இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பி சென்ற பொழுது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் என்ற குடும்பஸ்தரே கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தருமபுர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.