இன்று முதல் விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள்! 

இன்று முதல் விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள்! 

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
 
அதேநேரம், இந்த சேவைகளுக்காக 1,000  அரச பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபை  தெரிவித்துள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.