சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தும் கோரிக்கைக்கு தமிழ் தேசிய  மக்கள்  முன்னணி ஆதரவு! 

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தும் கோரிக்கைக்கு தமிழ் தேசிய  மக்கள்  முன்னணி ஆதரவு! 

76  ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கு  தமிழ் தேசிய  மக்கள்  முன்னணி  ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய  மக்கள்  முன்னணியின்  ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம்  சுகாஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே  இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முடிவின்றி  தொடரும் கட்டமைப்புசார்  இனவழிப்பிலிருந்து  தமிழ் மக்கள்  பாதுகாக்கப்பட வேண்டுமாயின்,  தமிழ்த்  தேசத்தின்  இறைமையும்,  தமிழ் மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு  எதிராக இடம்பெற்ற   இனவழிப்புகளுக்கான விசாரணைகளை  சர்வதேச  குற்றவியல்  நீதிமன்றம் விசாரணை  செய்ய வேண்டும் என்றும்   குறித்த  அறிக்கையில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,   எதிர்வரும்  04 ம் திகதி கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து டிப்போ சந்திவரை  கரிநாள் பேரணியொன்றை  முன்னெடுப்பதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.