உப காவல்துறை பரிசோதகருக்கு ஐஸ் ரக போதைப்பொருளை வழங்கிய சந்தேகநபர் கைது!

திருகோணமலை பகுதியில் போதைப்பொருளுடன் கைதான உப காவல்துறை பரிசோதகருக்கு ஐஸ் ரக போதைப்பொருளை வழங்கிய சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உப காவல்துறை பரிசோதகருக்கு ஐஸ் ரக போதைப்பொருளை வழங்கிய சந்தேகநபர் கைது!

தமது குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்திலிருந்து நேற்று பிற்பகல் நாடு திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, கடந்த 11ஆம் திகதி கைதான நிலாவெளி காவல் நிலையத்தில் கடமையாற்றிவந்த 32 வயதுடைய உப காவல்துறை பரிசோதகர், எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.