ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசம்!

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் நான்கு வருடங்களுக்கு நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசம்!

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் நான்கு வருடங்களுக்கு நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜி.எஸ் பிளஸ் வரிச்சலுகை காலாவதியாகவுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 2027ம் ஆண்டு வரை ஜி.எஸ் பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் வகையில் நீடிக்கப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில், குறித்த நன்மையை பெறும் நாடுகள் எவ்வித நட்டத்தையும் எதிர்நோக்காத வகையில் இந்த வரிச்சலுகை நீடிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை தொடரும் அதேவேளை, தற்போதைய முறைமையில் எவ்வித மாற்றங்களும் இன்றி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் பின்பற்றப்படும் அதே நடைமுறையின் கீழ், குறித்த வரிச்சலுகை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.