கொலையில் முடிந்த கோழி வளர்ப்பு மோதல் - சுன்னாகம் சம்பவம்

கொலையில் முடிந்த கோழி வளர்ப்பு மோதல் - சுன்னாகம் சம்பவம்

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில், உறவினர்களான அயலவர்களுக்கு இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை (30) மாலை இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சினைகள் நிலவி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், நேற்றைய தினமும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது. 

அதில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து, கொலைச் சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டள்ளார். 

கைது செய்யப்பட்டவரை சுன்னாகம் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.