மனித சங்கிலி போராட்டங்களை நடத்த தயாராகும் தமிழ்த் தேசிய கட்சிகள்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியதை காரணமாக கொண்டு தமிழ் மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் நேற்று தீர்மானித்துள்ளன.

மனித சங்கிலி போராட்டங்களை நடத்த தயாராகும் தமிழ்த் தேசிய கட்சிகள்!

இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் கூடி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார் மடத்திலிருந்து யாழ்ப்பாண நகரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.