மறு அறிவித்தல் வரை விடுமுறை இரத்து - வெளியான அறிவிப்பு!

மறு அறிவித்தல் வரை விடுமுறை இரத்து - வெளியான அறிவிப்பு!

மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக அஞ்சல் மா அதிபர் அறிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள் (12} திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்வாறு விடுமுறை இரத்துச்செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், சுமார் 6000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், 4 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை எனவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.